Thursday, November 6, 2014

காதல் பெரியார்

தூறலில்லா மேகத்தின்
சாரலில்லா மழைநாளில்
பெரும்பிழையாய் நினைத்தேன்
நனைவதில் சுகமென ..

வண்ணமில்லா
வர்ணகுழம்பில்
வரைந்த வானவில்லின்
கரைந்த ஓவியச்சிதறல்
என் காதல் ....


எச்சங்களென
கொச்சைப்படுத்த இயலவில்லை
தப்பிச்செல்லும் உன் நினைவுகளை ...

நீ
யாரோவென கடக்க தோன்றும்
அறிவின் ஆராய்ச்சியில்
மனம் வேறென
இரட்டை வேடமிடுகிறது
கனவுகளில் ....
காதலில் இரட்டைமுறை ஒழித்திட 

இங்கு நானே பெரியார் ...

        இவண்
கோப்பை தேநீரல்லாதது காதலென ..
தம்பிபையன்

Friday, October 17, 2014

காதல் சதுரங்கம்

நினைவுகள்  தப்பிச்செல்லும் 
சில நொடிகளில் 
கனவுகளுடன் வாழ்ந்துவிடுகிறேன் 
உன்னோடு....

காதலிப்பவன் எல்லாம்
கவிஞனாவதில்லை
காதலில் ஜெய்பதால் .....
நான்  கவிஞனானேன்  இப்போது 
உன்னால்...


உன்னால்
காதல் சதுரங்கத்தில் 
எல்லா திசையிலும்
எப்படியும், எப்பொழுதும் 
நகர்தல் சாத்தியமாகிறது .
இராணியாய்   ...


நான் 
கவனமான நகர்வானாலும் 
எப்படியும் சிறை படுத்தபடுகிறேன் 
இராஜாவாக .... 



வீழ்ந்தாலும் 
செம்மையான நகர்வால்
சிப்பாயிலிருந்து உயிர்த்தெழ முடிகிறது 
உன்னால் ...
மீண்டும் இராணியாய்


நிஜங்கள் மறிக்கொண்டேயிருப்பதால்
நிழல்கல்ளோடே  வாழப்பிடிக்கிறது 
எனக்கு ....


இவண் 
கனவுகளுடன் 
தம்பிபையன்




Monday, July 21, 2014

மௌனம் காதலாலே !!

வார்த்தைகள் எல்லாம்
வரிசைகட்டி நிற்கிறது காதல் ஏக்கத்தில்
மௌனம் கட்டியணைத்த
மெல்லிய அதிர்வுகளால்
மருகிநிற்கிறது உருகிய மனம்
 
எத்தனையோ நினைவுகள் கலைத்தாலும்
எப்போதும் கலையாத கனவுகளாய்
காதல்

தினம் தினம் புதுப்பித்துக்கொள்கிறேன்
கனவுகளை காதலாலே


இவண்
மருகிய மனதில் உருகிய காதலாலே

Friday, June 13, 2014

காவிரி....

தாயென்றழைத்த  காவிரியோ!
   தண்ணீரின்றித் தவிக்கிறது
கண்ணீரில் இதயங்கள் 
கனத்த இதயமாய் உள்ளங்கள்
கருணைகொண்ட கார்மேகத்தைக்  
கண்களில் காட்டுவாயோ!

இறைவா !
இங்கே   இதயங்கள் சில,
இரும்பு திரைகளால் இறுகியிருக்கின்றன
துரும்பெனப் பறக்கும்  எங்கள் வாழ்வு
துளிர்விட தூது அனுப்புவாயோ! கார்மேகத்தை

ஏர் பிடித்த உழவனோ

எலி பிடித்துக் கொண்டிருக்கிறான்
ஏனிந்த மாற்றம்?  என்னவன் வாழ்வினில்
சுழன்றும் ஏர்பின்னது வள்ளுவன் மொழி
உழன்றுகொண்டிருக்கிறான்
உழவன் உயிரோட்டமில்லாது  இன்று.....

சோறுடைத்த சோழநாடு 
கூறுபோட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது
வீறுகொண்டு வேங்கைபோல் பாய்ந்த பொன்னி
வீதியில் துகிலுரியப்பட்ட ........வீழ்ந்து  கிடப்பதால்

 பச்சைப் பட்டுடித்திப்
 பாரினுக்கெல்லாம் படியளந்த பூமியில்,
 வியர்வை மழையில் விளைந்தபூமி
 உதிரம்சிந்தக்கூட  உறுதியில்லை

 இறைவா இறஞ்சிகிறோம்
 உன்னிடம் வரம் கேட்கிறோம் 
 எங்கள் வாழ்வு வளம்பெற...

                                                    இவண்                                                             கண்ணீர்  நதியில் தண்ணீர்தேடி
தம்பிபையன் 

Thursday, June 5, 2014

இதழ்கள் உதிர்க்கும் வார்த்தை

 உன்
இதழ்கள் உதிர்க்கும் வார்த்தையில்
இலையின் சருகாய் உதிர்கிறேன்.
உணர்வுகள் மரணித்து
உயிர்வாழும் கனவுகளாய்
நான்.
என் நினைவுகளின் மரணித்தின் எல்லையில்
ஜனிக்கும் உன் காதலை
எங்கே புதைப்பாய்  சொல்,
அங்கே காத்திருக்கிறேன்
என் உயிர் பிரிந்து சுமந்துதிரியும்
கனவுகளோடு
இவண் 
@@@தம்பிபையன்@@@

Wednesday, June 4, 2014

கோடுகள்

கோணல்களனாலும் 
செம்மையாய்  இருப்பதால் 
சித்திரமென்று  அழகாகிறது 
ஓவியத்தில் ....

வளைவுகளானாலும் 
நெளிவு சுளிவானாலும் 


நேர்த்தியாகிறது 
கோலங்களில் ...

எதுவும் அளவில் அல்ல 
அழகில் அடங்கியது 
என் அன்பைப்போல்....

இவண் 
@@@தம்பிபையன் @@@ 

Monday, March 17, 2014

என் பயணங்கள்

என் இலக்குகளின்எதிர்ப்பக்கம் பயணிக்கிறேன்
நீ இல்லா தனிமையில்


விளக்குகள் அணைந்த வெளிச்சத்தில்
விடியலை மறந்து
பாதையைத் தேடுகின்றேன்  நான்....


ஒரு தேநீர் கடையின் 
சாலையோர சந்திப்பை
எதேச்சியாகக் கடக்கிறேன்  
ஒவ்வொருநாளும்  நம் நினைவுகளோடு


முரண்பட்டு நகரும் வாழ்க்கையில்
முகவுரை எழுதாது நான்
முடிவுரைப் படித்துப் பார்க்கிறேன் 

Tuesday, March 11, 2014

ஒளிந்து நிற்கிறது

சௌந்தர்யம் மின்னும் யாரிந்ததேவதை நீ...யென
வார்தைக்குள் ஒளிந்திருக்கும் உன் பெயரைப்போல்
வாழ்க்கையில் ஒளிந்திருக்கிறாய்
                ***************$***********
மொழியல்லாது விழியாலே எனை
விளிக்கின்றாய் காதலில்
உளிசெய்த சிற்பமாய் என்நினைவுகள்
ஒளிச்சிந்தும் தூரிகையில்  வழிவந்த ஓவியம்
          ***************$***********
கன்னகுழிதனின் சிரிப்பில்  
கண்ணம் வைத்துச்சென்றாய்
எண்ணம் இதுவன்றோயென
வண்ண கனவுகள் காண்கிறது மனம்…..
***********************************$********************
வால்முளைத்த  வானரமாய்த் திரிந்தவன்
வாள்கொண்ட விழியால் வீழ்த்தி
வாழ்வே நீயென எனை ஏங்க வைத்தாய்
    ***************$***********
அணையாய் தேங்கிய காதல் வெள்ளம்- நீ
அணைத்தவுடன் ஆனந்த தீபம் சுடர்விடுகிறது
வலிகண்டு சோர்ந்திருந்தால் – உன்
வழிகாட்டும் அரவணைப்பில்
வளிதாண்டி என்வாழ்க்கை சிறக்கிறது
          ***************$***********
குலம் குறுக்கே நிற்க
குளம்கட்டிநிற்கிறது கண்கள்
வலம் வருவோமெனக் காதல் வானில்'
வளம் நிறைந்த வாழ்க்கையாய். – ஏனோ
புலம்பெயர்ந்த நிலையாய் என் நிலை
          ***************$***********
வெள்ளம் வடிந்த நதியாய் மனம்
வெறுமையுடன் வீழ்ந்துகிடக்க
வெல்லம்தின்ற நினைவுகளாய்  உள்ளம்

​​

                                           இவண்
                                        $ தம்பிபையன் $

Wednesday, March 5, 2014

காதல்- பத்மினியுடன்

பண்ணையாரும் பத்மினியும்
தலைப்புகள்  கூட
சில நேரங்களில்
தவறுதலாக புரிந்துகொள்ளப்படுகிறது
என் காதல் போலவே ....

                                                                                            இவண்
                                                                                 $தம்பிபையன்$

Monday, March 3, 2014

மௌன காதல்



தென்றல் தீண்டா  மலர்
திங்கள் தீண்டா இரவு
தேன் தீண்டா வண்டு
வாசனை தீண்டா வண்ண மலர்
விடியல் தீண்டா காலை
விழிகள் தீண்டா பார்வை
மௌனம் தீண்டா மறுமொழி பேசா
மௌ கால் -என் காதல்


இவண்
പി.രാജസേകര്‍
















Friday, February 28, 2014

கதை சொல்லி






விக்கிரமதித்தன் கதைபோல்
நீண்டு கொண்டேயிருக்கிறது என்காதல்

வேதாளம் கதைசொல்வதுபோல்
நீயும் ஏதோதோ புதிர்போடுகிறாய்.
நம் காதலுக்கு....

பரமார்த்த குருவும்,சீடனுமாய்
என்செய்கையும்  பரிகாசிக்கப்படுகிறது உன்னால்

எத்தனையோ தந்திரங்கள் செய்தாலும்
பஞ்சதந்திரங்கள் போல் கொஞ்சவும் கெஞ்சவும்  நிற்கிறது

மரியாதை இராமன் யாரென்று தெரியாது
புரியாது நிற்கிறேன் நீதி கேட்டு..

அம்மாவிடம் கேட்ட அம்புலிமாமா கதையாய்
நிலா(நீ) எப்போ வரு(வாய்)மென நின்று பார்க்கிறேன்.

"இதுவும் கடந்து போகும்" மெனும்
ஜென் தத்துவத்தோடு காத்திருக்கிறேன்  நான்

இவண்
கதை சொல்லி 

Saturday, February 22, 2014

குருவாகி நிற்கிறாள்


சித்திரங்களுக்கு  வார்த்தைகள் தேடுவதும்
வார்த்தைகளுக்கா சித்திரங்கள் வரைவதும்
எளிதாகிபோன ஒன்று எனக்கு.....
ஏனோ தெரியவில்லை
என் காதலுக்கு மட்டும் வார்த்தைகள்
வசப்படவேயில்லை 
உன்னைப்போலவே......


உலகம் "தோல்வி" என்றழைப்பதை நான்  "திருப்புமுனை" என்றழைக்கிறேன் - ரா


Tuesday, January 7, 2014

இதுவும் இயற்கை

ஆகாயம் பூக்கிறது                       
பௌர்ணமி பொழிகிறது
பால் நிலா குளிர்கிறது
இரவு நீள்கிறது
வைகறை துயில் களைகிறது
கதிரவன் கண்விழிக்கிறது
பனித்துளி உடைகிறது
தடாகம் குளிர்கிறது
தாமரை சிரிக்கிறது
இதெல்லாம் இயற்கை எனும்போது
உன் மீது நான் கொண்ட காதல் மட்டும்
எப்படி மாறிப்போகும்..??!!!
இவண்

காதலுடன்