Thursday, November 6, 2014

காதல் பெரியார்

தூறலில்லா மேகத்தின்
சாரலில்லா மழைநாளில்
பெரும்பிழையாய் நினைத்தேன்
நனைவதில் சுகமென ..

வண்ணமில்லா
வர்ணகுழம்பில்
வரைந்த வானவில்லின்
கரைந்த ஓவியச்சிதறல்
என் காதல் ....


எச்சங்களென
கொச்சைப்படுத்த இயலவில்லை
தப்பிச்செல்லும் உன் நினைவுகளை ...

நீ
யாரோவென கடக்க தோன்றும்
அறிவின் ஆராய்ச்சியில்
மனம் வேறென
இரட்டை வேடமிடுகிறது
கனவுகளில் ....
காதலில் இரட்டைமுறை ஒழித்திட 

இங்கு நானே பெரியார் ...

        இவண்
கோப்பை தேநீரல்லாதது காதலென ..
தம்பிபையன்

No comments:

Post a Comment