Sunday, January 18, 2015

எதுவும் இரகசியமில்லை

இங்கே எதுவும் இரகசியமில்லை
பரம இரகசியமோ ,சிதம்பர இரகசியமோ!

அழுக்குகளை ஆவனப்படுத்தியே
அனேக தருனங்களை
இரகசிய படுத்துகிறோம் .
வெளுத்திட நினைக்க மனம் வெம்பியே கிடக்கிறது.

நாம் ....
கவனிக்க மறந்தவைகளும்
கவனத்தில் மறைந்தவைகளுமே
இரகசியங்களாய் பலருக்கு..

சிலரின்
சொல்லகூட வார்த்தைகளைவிட
சொல்லா வார்த்தையே
இரகசியமாகிறது.

இலவுகாத்த கிளியும் கூட
இரகசியம் அறிந்துவிட்டது .
இலவங்காய் நிலையை...

உன் இரகசியத்தை உடைத்ததிட
வினாக்கள் வீசினால்
விடைகளில் இரகசியபடுத்துகிறாய் 
என்னை ...

உன்னில் என் காதல் நிலை
 ஒருபோதும் விளங்காதோ!
 கண்ணில் காதலா  கர்வமா




No comments:

Post a Comment