Sunday, January 18, 2015

நம் பலம்

விடயங்களில்லா
சில வினாக்களோடு
நகர்கிறது வாழ்வு..

எல்லோருக்கும் தனி தனி உலகம் இருக்க .
எல்லாருமே என் உலகம் என்பது 
முட்டாள்தனமா ?.பைத்தியகாரதனமா ?

எந்தன் பலவீனத்தில்
உந்தன் பலத்தை பிரயோகிக்கிறாய் ..
இருபக்கமும்
பலவீன மட்டுமல்ல
பலமிருந்தாலும்
செல்லா காசே வாழ்வும்

கோடுகள் பூதாகரமாக்கப்பட்டால்
புள்ளிகளாய் ; வாழ்வும் தனித்தீவாய் .

எல்லாம் கடந்தவையென்பதைவிட;
கடப்பவையென்பதே
நம் பலம் .

No comments:

Post a Comment