களம் கண்டு வீரம் பறைசாற்றும்
வேலுநாச்சியாய்...
ஆண்டவனுக்கே அன்னையாய்
அவதரித்த காரைக்கால் அம்மையாய்...
சித்தார்த்தன் புத்தனாக சிரமேற்றப் போது
கரம் பிடித்த யசோதரை அன்போடு
கைகாட்டினாள் –
அன்பை போதியென
தவக்கோலம் தரித்து அன்னை சாரதா...
நிலாச்சோறு ஊட்டிய நீ,
நிலவிற்கே உலா சென்று வருகிறாய்...
வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும்
உந்தன் வசமே...
கைவிரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுகிறது
திருமாலின் அவதாரங்கள்கூட...
காத்திருக்கும் சவால்களில் தினம் தினம்
பூத்துக் கொண்டிருக்கிறாய் புது புது அவதாரமாய்...
எண்ணிலடங்கா அவதார எண்ணிக்கை,
பெண்களின் பெருமை பறைசாற்றும் நாளில்...
அறிவால் உலகை ஆளும் ஒளிவிளக்கு நீ...
அன்னை, உமக்கு அன்பான வாழ்த்துக்கள்!
பி . இராஜசேகர்

No comments:
Post a Comment