Monday, March 3, 2025

போதையின் பாதையா ???

ஒரு கோப்பைத் தானேயென

ஆரம்பம் கொள்கிறாய் ஆதியில்....

வாழ்வின் வெற்றிக் கோப்பையைத் தவறவிட்டு

பாதியில் தடம் மாறுகிறாய் உன் பாதையிலிருந்து

பற்றுதலின்றி வாழ்வை பறிகொடுக்கிறாய்...


புகை பகையெனத் தெரிந்தும்

வகையாய்ச் சிக்கிக்கொள்கிறாய்

வலையில்.....

இது எமனின் பாசவலை

எவராலும் காப்பாற்ற முடியாது உனை..


"மது உயிருக்கு கேடு"

வாசகத்தின் அர்த்தம் கொள்ளாத நீ

அஸ்த்தமாக்கி கொள்கிறாய்

உன்னையே நீ கொல்கிறாய்.


உன் பெயர் பிரதியெடுக்க

சரித்திரத்தின் பக்கங்கள் காத்திருக்க- நீயோ

போதையின் பக்கத்தில்

தரித்திரம் கொள்கிறாய்..உன்

சரித்திரம் கொல்கிறாய்.


சீ ... என நீ புறந்தள்ள மறுத்தால்

அடச்சீ ... என அகிலம் புறந்தள்ளும்

நினை .. நல்லதை நினை

செய் .. நல்லதைச் செய்

நல்ல மகனாய் வீட்டிற்கும்

நல்ல குடிமகனாய் நாட்டிற்கும்


கற்றவன் நீ ....

கறையெதுவெனத் தெரிந்து

கரையிட்டு வாழ்ந்தால்

மறை போற்றும் மாமனிதனாகலாம்..


பி. இராஜசேகர்







No comments:

Post a Comment