Friday, September 25, 2015

கேட்பதற்கு ஏதுமில்லா
உன்னிடம்
சொல்வதற்காக ஆயிரம் கதைகள்
என்னில்...

கரைபுரளும்  என் நினைவலைகளில்
வற்றியே கிடக்கிறது
உன் பாசம்....

எத்தனையோ மொழிகள் பேசும் நீ ....
எப்படி மறைந்தது உன் பிள்ளை மனம்  இப்பொழுது..

கட்டமைக்கப்பட்ட
கணினி நிரல்களாய்
கடத்திகொண்டு இருக்கும்
நிகழ்வுகளாய் வாழ்வு..

 உணர்வின் உயிர்ப்பு
ஒருமுறையேனும் உயிர்ப்பிக்க
உந்தன் வார்த்தைகளை
உகுத்துவிடு...

$$$ தம்பி பையன்$$

Sunday, January 18, 2015

நம் பலம்

விடயங்களில்லா
சில வினாக்களோடு
நகர்கிறது வாழ்வு..

எல்லோருக்கும் தனி தனி உலகம் இருக்க .
எல்லாருமே என் உலகம் என்பது 
முட்டாள்தனமா ?.பைத்தியகாரதனமா ?

எந்தன் பலவீனத்தில்
உந்தன் பலத்தை பிரயோகிக்கிறாய் ..
இருபக்கமும்
பலவீன மட்டுமல்ல
பலமிருந்தாலும்
செல்லா காசே வாழ்வும்

கோடுகள் பூதாகரமாக்கப்பட்டால்
புள்ளிகளாய் ; வாழ்வும் தனித்தீவாய் .

எல்லாம் கடந்தவையென்பதைவிட;
கடப்பவையென்பதே
நம் பலம் .

எதுவும் இரகசியமில்லை

இங்கே எதுவும் இரகசியமில்லை
பரம இரகசியமோ ,சிதம்பர இரகசியமோ!

அழுக்குகளை ஆவனப்படுத்தியே
அனேக தருனங்களை
இரகசிய படுத்துகிறோம் .
வெளுத்திட நினைக்க மனம் வெம்பியே கிடக்கிறது.

நாம் ....
கவனிக்க மறந்தவைகளும்
கவனத்தில் மறைந்தவைகளுமே
இரகசியங்களாய் பலருக்கு..

சிலரின்
சொல்லகூட வார்த்தைகளைவிட
சொல்லா வார்த்தையே
இரகசியமாகிறது.

இலவுகாத்த கிளியும் கூட
இரகசியம் அறிந்துவிட்டது .
இலவங்காய் நிலையை...

உன் இரகசியத்தை உடைத்ததிட
வினாக்கள் வீசினால்
விடைகளில் இரகசியபடுத்துகிறாய் 
என்னை ...

உன்னில் என் காதல் நிலை
 ஒருபோதும் விளங்காதோ!
 கண்ணில் காதலா  கர்வமா