Friday, November 23, 2012

அம்மா






ம்மா 

யாதுமாகி நின்றவள்


யாதுமாகி நின்றவள், 

 இவள் எனக்குள் புதைந்துபோன நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவள், என்னில் கரைந்துபோன என் நினைவுகளை மீட்டெடுக்கும் அவளுக்காக.என் நினைவுத்துளிகளை சேகரித்தேன் யாதுமாகி நின்ற என்னவளுக்காக .
கனவுகளில் பூக்கள் சூட்டி மகிழ்ந்த அவளுக்காக , நினைவுகளில்

அமைதிச்சுழல்


 அமைதி
கவிதைகளை  எல்லோரும் 
அமைதியாகத்தான்  படித்துக்கொண்ட்டிருக்கிறோம்
ஏனென்றால் 
அது அமைதி இல்லா ஒருவனின் 
ஆழமான வரிகளாதலால் 



Thursday, May 24, 2012

ம் ... ஒற்றை சொல் .



ம்..

 ம் ...
 ஒற்றை  சொல் .
 காதலை  சொல்ல ...
 சங்ககால  புலவனுக்கு
 நானூறு 4௦௦ பாடல்கள் அகநானுற்றில் .
 இருனூற்றெண்பது குறள்கள் 
 இன்பத்து பாலில்  வள்ளுவனுக்கு ....

உனக்கோ 
ம் என்ற ஒற்றை சொல்  மட்டுமே .
 காதலை சொல்ல ..


இவன்
    ~ தம்பிபையன்~@

எது காதல் ?


எது காதல் ?


வெள்ளை நிற வண்ணமோ
கொள்ளை  கொள்ளும்
உள்ளத்தை  என்றேன் ....
மஞ்சள் தான் ஏனோ
என் மனதை  மயக்குகிறது  என்றாய் ...

அந்தி வான சூரியன்
சிந்தும் கதிர்கள்  சிலாய்கிறது   எனக்கு ...
பால் நிலா சிந்தும் பௌர்ணமி
சிதறி கிடக்கும் நட்சத்திர இரவு
சில்லென்ற இனிமை என்கிறாய் ...

யாருமற்ற  ஒற்றையடி  பாதை எனக்கு ..
கொன்றை மர நிழல் உனக்கு ..

இப்படி  வேறு வேறாக
வாழ்ந்தாலும் ....
இருவரும்  இரு புள்ளிகளாய்
இப்படி  ரசித்தாலும் ...

ஒரு  காதல் புள்ளியால்  வாழ்கிறோம்
உன் ரசனையும்
என்  ரசனையும்
வேறானாலும் ...
உன்னோடு  நானும்
என்னோடு  நீயும்
நம்மோடு வாழ்கிறோம்
காதலால் ....