அவ்வப்போது அவளின் அத்துமீறல்கள் நடக்கும்
எந்தன் கனவினில்......
ஆதரமாய் எந்தன் உளறல்கள்...
ஆதரமாய் எந்தன் உளறல்கள்...
எத்தனை தான் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எந்தன் நினைவுகள்
அவள் உன்னை ஆக்கிரமித்துவிட்டாளென்று..
பதிலடிகொடுக்க நினைத்தால்
பகலவன் துணைகொண்டு
பதுங்குகுழி அமைக்கிறாள்.
பதுங்குகுழி அமைக்கிறாள்.
காட்சிகளாய் அவள் என்னைக் கடக்க
கன்னியவள் வைத்தது
காதல் வெடியா? கண்ணி வெடியா?
காதல் வெடியா? கண்ணி வெடியா?
கனவுகளிலிருந்து கலைக்க நினைத்தாலே – என்
நினைவுகள் சேதாரமாகிவிடுகிறது
சேதாரத்திற்கு ஆதாயமாய் இதயத்தைப் பரிசாக்கினாள்...
இந்தியா பாகிஸ்தான் போலில்லாது
எங்களுக்குள் அவ்வப்போது அன்பு சண்டைகள்;
வேலியின் எல்லைக்குள்தான்
எங்கள் இருவரின் ஊடுறுவல்கள் நடக்கும்.
ஊடல்கள் தோன்றும்போதெல்லாம்
மூன்றாம் நாடுபோல் முழுமதி சமரசதிற்கு
மூக்கை நுழைக்கும் –நான்
வேண்டாமென்றால் வெடுக்கெனக் கோபப்படுகிறாள்
நான் சொன்னது நிலவைத்தானே .... இவள் ஏன் ??
எங்கள் சமாதான பேச்சுகள்
ஆக்ரா கரையில் நடப்பதில்லை
ஆக்ரா கரையில் நடப்பதில்லை
ஆதலால் எப்போதும் தோற்பதில்லை
இருவரும் சேர்ந்தே பயணிக்கிறோம்;
வாழ்க்கை பேருந்தில்
வாழ்க்கை பேருந்தில்
லாகூர் பயணம் போல் தோற்பதேயில்லை
இவண்
காதல்
தேசத்தின் சக்கரவர்த்தி



