ஒரு சண்முகமாய் நான்
வலம் வருகிறேன்
எந்தன் "அழகியை" எங்கே
தேடுவது?
தொலைத்துவிட்ட அந்த
துளிர் காதல் இன்றும்
சுகமாய் சுடுகின்றது
இரவின் வலியில்
இரு இமைகளுக்கிடையே
கனவாய் தோன்றிடும் அந்தகாதல்
சுகமா ? சுமையா ?
காலத்திடம் விடைகேட்கிறேன்
கண்களுக்கு நிஜமான காட்சியாய் வேண்டுமென
தவம் கிடக்கின்றேன்
வினாக்கள் தான் அமைகின்றன
எந்தன் விடியல்கள்
வெளிச்சத்திற்க்கு வரமறுக்கின்றது
அச்சம் தான் மிச்சமாய் மிளிர்கிறது
எப்படி துளிர்விட்டதென்று
எந்தன்
இதயத்திற்கு தெரியவில்லை
நினைவுகள் மட்டும் தூங்காமல் துடிக்கிறது
உந்தன் முகவரிகள்
மறைக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா?
இரவும் பகலுமாய்
இருவரும் வாழ்கிறோம்
எப்பொழுதும் சேரவேமாட்டோமா?
ஏக்கங்கள் நினைவில்
துக்கங்கள் தொடர்கின்றன.
விழித்துக்கொண்டே கேட்கிறேன்
உறக்கத்தை கொடுவென்று
எப்படிக் கொடுப்பாள்
எங்கோ தொலைவில்-அவள்
காலச்சக்கரத்தில் கண்ணுக்கெட்டா தொலைவில்
இவன்
"அழகி"யின் சண்முகம்
அவளின்
பொன்முகம் தேடி
~@தம்பிபையன்@
~@தம்பிபையன்@
இராஜசேகர் பிச்சைமுத்து B.E, M.E , (Ph.D)
.jpg)

No comments:
Post a Comment