உன் நினைவுகளோடு
சண்டையிட்டு, சண்டையிட்டு,
இரவின் விளிம்பில்
நிற்கிறேன் நான்...
இரவின் மடியிலாவது
இனியொரு இடம் கொடு!
என் காதலை
நீ விலக்குவது புரிகிறது எனக்கு,
நான் விளக்குவது
புரிகிறதா உனக்கு...?
என் தொட்டில் உறக்கம் – இப்போது
கட்டிலில் இல்லை,
காட்டிலாவது கிடைக்குமா எனக்கு?
முப்பொழுதும் உன் நினைவுகள்...
அது எப்போது நிறைவடையும்?
