Tuesday, February 4, 2025

மௌனம் பேசும் காதல்



எல்லாம் மாறுகிறது வாழ்க்கையில்

அசல் எது போலி எதுவென

அறிய முடியாதவையாய்...

எல்லா வினாக்களுக்கும் விடையுண்டு

இந்த AI உலகில் உன் மனதைத் தவிர...


நான் யாரென்று எனக்கும்

நீ யாரென்று உனக்கும் புரிதலில்லாத போது

நாம் யாரென்று உலகம் சொல்கிறது.


நீர் தேடும் வேராய்

உன் நினைவுகள் எனக்குள் விரவுகின்றன ..

கடல் நீராய்க் கனவுகள்

ஏனோ என் காதல் தாகம் தீர்க்கவில்லை


ஒரு துளிபுன்னகைச் சிந்திவிடு எனக்குள்

முத்தாய் பிரசவிக்கிறேன் உனக்குள்

நம் காதலை 

மொத்தமாய் உனாக்காகவே...


சத்தங்களும் மௌனமாய்

ஒன்றோடொன்றுச் சேராக் கடல் அலையாய்

என் கனவுகளும் உன் நினைவுகளும்...

தூரத்துக் கடலும் வானமும் கைகோர்பதுபோல்

என் நினைவுகளும் கனவுகளும்..



உன்னில் நானா? என்னில் நீயா?...

யார் யாரென்று விவாதிக்க விரும்பவில்லை

எப்பொழுதேனும் எதேச்சையாகச் சந்தித்தால்

கண்ணில் ஒரு புன்னகை உதிர்த்துவிடு.

என் காதலோடு வாழ்ந்துவிடுகிறேன்...


                                                            கால் நினைவுகளோடு மௌமாய்